Thursday, March 12, 2009

நலம் வாழ்வோம்!

பரபரப்பான உலகிலே
துருதுருப்பான இளைஞரே!
சுறு சுறுப்பாய் உழைக்கவே
விறுவிறுப்பாய் வாருங்கள்!

அவன் உயர்ந்தான்
இவன் சரிந்தான்
என்ற பேச்சே நமக்கெதற்கு?
நாம் உழைப்போம் நலம் பிழைப்போம்
ஓடி வாருங்கள் தோழர்களே - இனியும்
ஓய்ந்து கிடந்தால் நாம் வீணர்களே!

எட்டிப்பார் வெளியுலகை - நீ
நாட்டிப்பார் உன் உழைப்பை!
வெற்றிக் கனிகள் உன் கையில்
நிச்சயம் வந்து விளையாடும்!

நாட்டை வீட்டை ஒரு போல் உயர்த்த
நண்பர்கள் ஒன்றாய் செயல்படுவோம்!
கோட்டை ஏறி அரசும் அமைத்து
குடிநலம் பேன ஆண்டிடுவோம்!

ஊழல் அற்ற ஒரு சமுதாயம்
உழைக்கும் வர்க்கத்தால் வரவேண்டும்!
யாரும் எதையும் சாதிக்கும் - உண்மை
ஜனநாயகம் உயிர் பெற வேண்டும்!

3 comments:

  1. Sirappana Padaippu..!
    Karuthukkal Ovvondrum penapada vendum....!!

    Yes, Together we can enlighten the World...! :-)

    ReplyDelete
  2. Varigal Ovvondrum Penapada vendum.... !

    Yes, Together Enlighten the World...!! :-)

    ReplyDelete
  3. உங்களது கருத்துக்கு மிக்க நன்றி மஹி அவர்களே!!!
    இன்னும் இது போல பல படைப்புக்களை பெற்றிட கீழ் குறிப்பிட்டுள்ள வலைதளத்தை அனுகுங்கள்...http://manjaimayilan.blogspot.com/

    ReplyDelete