Tuesday, March 31, 2009


நாகரிகம்

ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள் ‘புகை பிடிக்க கூடாது’ என்ற இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். தற்செயலாக அதை நிர்வாக மேலாளர் பார்த்து விட்டார். சற்றும் கோபப்படவில்லை அவர்கள் மீது. நேராக தனது இருக்கைக்குச் சென்று தன்னிடம் இருந்த உயர்ந்த ரக சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் தொழிலாளர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை தூக்கி எறிந்து விட்டார்கள். மேலாளர் ஒன்றுமே சொல்லாமல், ஆளுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தார். அவர்கள் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்கள்.அப்போது மேலாளர் கூறியது? “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா?” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் அங்கு சிகரெட் குடிக்கவில்லை.

“அன்பின் மூலம் வெளிப்படுத்தும் நாகரிகம் எப்பொழுதும் வெற்றியையே தரும்”.

No comments:

Post a Comment