Thursday, March 12, 2009

நல்லோர் அறிதல்

நல்லவன், கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ஒருவனை பல நாட்கள் ஆராய்வது. ஆராய்ந்து தெளிந்த பின் நட்பு கொள்வது.

'ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்' என்றார் வள்ளுவப் பெருந்தகை.

'தீயவர்' என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையாக 'நீரவர்' என்று வள்ளுவர் கூறுகிறார்.

அதாவது, பிறை நாளும் வளர்வது போல அறிவுடையார் நட்பு வளரும்; முழுநிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

குறள்:

நாடாது நட்டலில் கேடில்லை; நட்டபின்

வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.

பொருள்:விரும்பி நட்பு செய்தவர்க்கு, ஒருவருடன் நட்பு கொண்டபின் அந்த நட்பை விடுவது கடினம்; அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக்காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே- நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று.

விளக்கம்: நல்லவரைக் காண்பதுவும், அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும். அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடி இருப்பதுவும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.

No comments:

Post a Comment