Thursday, March 12, 2009

மகளிரின் பெறுமை

“நாம் அனைவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாது என்கின்ற காரணத்தினால் தனித்தனித் தாயின் வயிற்றில் பிறந்து அண்ணன், தம்பிகள் ஆனோம்".

- அறிஞர் அண்ணா.

மகளிர் தின ஆரம்பம்: மார்ச் 8ம் நாள் உலக மகளிர் நாள். எங்கே இந்தக் கருத்து உருவாயிற்று? உலகம் பல புரட்சிகளைச் சந்தித்து இருக்கிறது. அகிலம் திடுக்கிட வைக்கிற பல நிகழ்ச்சிகளைச் சந்தித்து இருக்கிறது. பிரெஞ்சு நாட்டில் எழுந்த புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற குரல் எழுந்த புரட்சி, மண் குடிசைகள் மாளிகைகளைப் பார்த்து மிரட்டிய புரட்சி. அடிமைகளின் கரங்களில் வீர வாள் ஜொலித்த புரட்சி. அங்கே வெட்டுக் கத்திகளுக்கு முன்னாள் மன்னர்களின் தலைகள், மகாராணிகளின் தலைகள் வெட்டப்பட்ட நிகழ்ச்சி ஐரோப்பியா கண்டத்தையே அச்சுறுத்திய புரட்சி 1759ம் ஆண்டு நடந்தது. அந்த புரட்சி நடந்த போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டு ஆயிரம் பெண்கள் ஆயுதங்களோடு இருந்தார்கள். அந்தப் புரட்சியில் பெண்களும் பங்கு ஏற்றார்கள். அதன் விளைவாகவே 79 ஆண்டுகளுக்குப் பிறகு சம உரிமை எங்களுக்கு வேண்டும், வேலை செய்யும் இடத்தில் உரிமை, தொழிற்சங்கத்தில் உரிமை என்ற குரல் எழுப்பப்பட்டு அதற்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் பெண்களுக்கு வேலை நிறுத்த உரிமைக்கு உத்திரவாதம் வளங்கப்பட்ட காலத்தில்தான், சரியாகப் பிரெஞ்சுப் புரட்சி நடந்து. 130 ஆண்டுகளுக்குப் பிறகு, 1889ம் ஆண்டு கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்களை அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார். அந்தக் குரல் எழுந்தது, இருபதாம் நூற்றாண்டு பிறந்தது. 1907ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராக கிளாரா ஜெட்கின் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்நது நியூயார்க் நகரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள் "எங்களுக்கு தொழிற்சங்க உரிமை வேண்டும்; எங்களுக்கு வேலையில் நியாயமான நீதி கிடைக்க வேண்டும்" என்று. திரண்டு எழுந்த அவர்கள் குரல் கொடுத்து வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி மூன்று ஆண்டுகள் கழித்து அதே கிளாரா ஜெட்கின் சொன்னார், "இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர்நாள்" என்று.

· ஒன்பது ஆண்டுகள் கழித்து அதே மார்ச் 8ம் நாள் சோவியத் யூனியன் பெட்ரோகிராட் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான் பெண்கள் உரிமை வேண்டும், ஒடுக்கு முறையைய் எதிர்ப்போம் என்று அணிவகுத்து வந்தார்கள். இந்த ஒரு அணிவகுப்பு சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.

· 1936ம் ஆண்டு அதே தினம் ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து கொண்டு இருந்த ஃபிராங்கோவை எதிர்த்து 80,000 பெண்கள் மேட்ரிட் நகரில் ஊர்வலம் வந்தார்கள்.

· 1950ம் ஆண்டு அதே தினம் "இனிமேல் அணு ஆயுதம் உலகத்தின் உயிர்களைக் குடிக்கக்கூடாத, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகள் மனித குலத்தை அழித்துவிடக்கூடாது, இந்த ஆயுதங்களை அழிக்க வேண்டும்" என்று மூன்று இலட்சம் பெண்கள் ஐரோப்பா கண்டத்தில் அஞ்சல் அட்டை அறப்போர் நடத்திய நாள்.

இந்த அடக்கு முறையில் பலர் பலியாகி இருக்கிறார்கள். துப்பாக்கி முனைகளுக்குத் தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். உலக மகளிர் நாளில், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சிந்தனைப் பூக்கள் – இந்த மகளிர் தின நன்நாளில் உங்களுக்காக மகளிர் பற்றிய கட்டுரை பெண்மை என்ற தலைப்பில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment