Tuesday, March 17, 2009

நினைத்தலும் நடத்தலும்

“நாம் என்ன நினைக்கிறோமோ, தானாகவே மாறுகிறோம்!

நமது எண்ணங்களே, நமது செயல்களாக மாறுகின்றன!!”

உதாரணம்: சோக பாத்திரங்களில் நடித்த ஒரு நடிகை அடிக்கடி சோர்ந்து போவதாகக் கூறி தனது “நடிப்பை” மாற்றிக் கொண்டார். “கால், கை சோர்ந்து விழலானேன்!” என்ற தலைப்பில் ஒரு பாடல் அமெரிக்காவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. அதை அனுபவித்துப் பாடிய அந்த பாடகியோ தினமும் பல மணி நேரம் களைத்து ஓய்ந்து போய்விடுவாராம். இதை ஒரு நாள் உணர்ந்த அவர் பிறகு அதைக் கச்சேரியில் பாடுவதை நிறுத்தி விட்டாராம்.

நமது ஒரு சில வலிமையான சொற்களே வேதங்களில் மந்திரங்காளாக்கப்பட்டுள்ளன.

திருச்சிற்றம்பலத்தில் “நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க” பாடலை முடிக்கும் போது “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” என்று மூன்று முறை கூறப்பட்டு அந்த பாடல் முடிகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளார்ந்த உணர்வுடன் இந்த “இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!” பாடல் வரியைய் கூறி முடிக்கும் போது இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மக்களுக்கும் நன்மையே ஏற்படுமாறு வல்லமையான சொற்களை பிராத்திக்கிறோம்.

வலிமை என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும்போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் திரும்ப திரும்ப சொல்லப்படும் போது சோர்வு தருகிறது.

“எந்த எண்ணங்கள் நம் மனத்தில் உலவுகிறதோ அந்த எண்ணங்கள்

அதன் பிரதிபலனை நமக்குக் கொடுக்கின்றன”.

2 comments:

  1. I AGREE WITH U
    DYNAMICRAJA@GMAIL.COM

    ReplyDelete
  2. உங்களது கருத்துக்கு மிக்க நன்றி அஞ்சலி அவர்களே!!!

    ReplyDelete