Monday, March 30, 2009

தோற்றமும் அறிவும்

அமெரிக்க மக்களுக்கே ஆங்கிலத்தில் அறிவுரை கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு முறை புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கையின் அருகில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் என்றாலே வெறுப்பு தான். அதுவும் துறவி, காவி உடை அணிந்தவர் என்பதை பார்த்தவுடன் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசினர். விவேகானந்தர் பதில் பேசவில்லை, சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் புகைவண்டி நின்றது. அப்பொழுது புகைவண்டி நிலைய அலுவலரை அழைத்து “இங்கே தண்ணீர் கிடைக்குமா” என்று மிக அழகாக ஆங்கிலத்தில் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியத்துடன் திடுக்கிட்டனர். உடனே விவேகானந்தரிடம் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டனர். “நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும்” என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.அப்படியானால் நாங்கள் உங்களை அரை மணி நேரமாக திட்டிக் கொண்டிருந்தோம்… நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை என்றனர். விவேகானந்தரின் பதில்…”நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல”. அவரது புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் சுவையாக இருந்தது.

“ஆளைப் பார்த்தவுடன் யாரையும் தவறாக புரிந்து கொள்வதோ அல்லது

அவரைப் பற்றி தவறாக மதிப்பிடுவதோ வேண்டாம்”.

2 comments: