Wednesday, January 28, 2009

மனதை அறி

மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான்.

· நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், நான் எல்லாவற்றையும் விட தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான்.

· தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிர் மனது.

· மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது.

· மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே எல்லா அறங்களிலும் அடிப்படையாகும். மனக்குற்றத்தோடு செய்பவை உலகை ஏமாற்றும் ஆரவாரத்தனமே ஆகும்.

· உடம்பு களங்கப்பட்டிருக்கலாம். ஆனால் மனது கலங்கப்படாதிருக்குமானால் அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.

திருமூலர் திருமந்திரத்திலே

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமற் தானே கெடுகிறான்

தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!"

"தானே தனக்குப் பகைவனும், நண்பனும்

தானே தனக்கு மறுமையும், இம்மையும்

தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே!!"

1 comment:

  1. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
    தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
    குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள்,
    உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
    இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
    மேலும் அறிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete