Wednesday, January 21, 2009

சான்றோரினத்திரு

உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். (குறள் 395)

பொருள் செல்வர் முன் வறியவர் பணிந்து நிற்பது போல், கற்றவரிடம் பணிந்திருந்து கற்றவரே உயர்ந்தவர். அங்ஙனம் கல்லாதவர் கடைப்பட்டவராவர்.

விளக்கம் நல்லார் சொல் கேட்டலும்

நல்லார் வழி நடத்தலும்

நல்லார் செயல்களை திரும்ப திரும்ப நினைவு கூர்தலும்

நல்லார் ஆவதற்கு வழி விடும் என நம்புகிறேன்.

இதைத்தான் ஒளவையார் கூட இரண்டு வார்த்தையில் மிக அருமையாக சொல்லியுள்ளார். சான்றோரினத்திரு.

பொருள் - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றோருடன் கூடி வாழ வேண்டும்.

No comments:

Post a Comment