Wednesday, January 28, 2009

பொய்யில்லா வாழ்க்கை

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

பொருள்: உள்ளத்தால் பொய் சொல்லாது நேர்மையாக வாழ்பவன் உலகச் சான்றோர் உள்ளத்தில் புகழ் வடிவமாக நிலைத்திருப்பான்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த

நன்மை பயக்கும் எனின்.

பொருள்:

  • குற்றமில்லாத நன்மைமட்டும் தருமானால் பொய்கூட வாய்மையாகக் கருதப்படும்.
  • குற்றமற்ற நன்மையைய் விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும் கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தை பெற்று விடும்.
  • பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்து விடும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
  • இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றி விட முடியும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம். பொய்மை, வாய்மை ஆகிறது புரைதீர்த்த நன்மை பயக்கும் போது.

பொய்யாமை பற்றி இலக்கியங்கள் கூறுவது:

  • ஒரு பொய் பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும்,
  • ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும்,
  • ஒரு பொய் ஒரு குடும்பத்தையே பாழாகிற்று என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

பொய்யாமை பற்றி பழமொழிகள் கூறுவது:

  • பொய் சொன்னால் 'நாக்கு வெந்து போகும்'
  • பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
  • பொய் சொன்னால் வாயில் புற்று வைக்கும் என்றும் பழ மொழிகள் இன்றும் அறிவுறுத்துகின்றன.

எந்தப் பாவங்களை நீ செய்தாலும் கூட, நீ கடை பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம் பொய் சொல்லாமல் இருப்பது.

No comments:

Post a Comment