Friday, January 9, 2009

ஓ நண்பர்களே!!!

ஒரு தீயவன் அல்லது கயவன் தோளில் கைப்போட்டு நெருங்கி விட்டால் ஒரு பாரதப் புதல்வன் பாழாகி விடுகிறான். இதை தான் நம் முன்னோர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

"மன்னன் எவ்வளியோ மக்கள் அவ்வளி"

"சேர்க்கை எவ்வளி செய்கை அவ்வளி"

"விழுதுக்கு இறைத்த நீர்"

இதை தான் திருவள்ளுவரும் கூட

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

பொருள் - ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

நட்பு பற்றி ஒளவையார் கூறுவது

"ஒருவனைப் பற்றி ஓர் அகத்து இரு" - நல்லவன் ஒருவனை துணையாகக் கொண்டு ஒரே இடத்தில் வாழ்.

நல்லார் தொடர்பினால் வரும் நன்மை

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லாற் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று

பொருள் - நல்லவரைக் காண்பதும், அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும். அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடி இருப்பதும் நல்லறிவம் நல்லொழுக்கமும் தரும்.

நல்லோரால் எல்லார்க்கம் நன்மை

நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்(டு)

எல்லேர்க்கும் பெய்யு மழை.

பொருள் - நெல்லுக்கு இறைத்த நீரால் புல்லும் வளம் பெறும். அது போல நல்லோரைச் சார்நத எல்லோரும் பயன் அடைவர்.

No comments:

Post a Comment