Friday, February 27, 2009

அனுபவம்

நாம் நமது அனுபவத்தை இரண்டு வகையாக கூறலாம்.

1. ஆட்படும் அனுபவம் அல்லது சிறப்பான அனுபவம்

2. மோசமான அனுபவம்

சிறப்பான அனுபவம் - எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதிலிருந்து கண்டிப்பாக ஏதாவதொரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மோசமான அனுபவம் - ஒரு செயலை செய்யும் போது அதிலிருந்து எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ளவில்லையோ அது மோசமான அனுபவம்.

அனுபவத்தின் சிறப்பு - உலகிற்கே வெளிச்சம் கொடுக்கக்கூடிய மின்சார விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வாய் எடிசன் முதல் முறையிலேயே பல்பைக் கண்டுபிடித்து விடவில்லை. ஏறக்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு தான் அவர் 'பல்பைக்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள். அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்று தான் வெற்றி பெற்றது இல்லையா....?' என்று அவரிடம் யாரோ ஒருவர் கேட்டார்.

எடிசனின் பதில்... முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது? ஒரு பல்பை உருவாக்க தவறாக முயற்சி செய்வது எப்படி? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேன் என்று கூறி, அவரது மோசமான அனுபவத்தை கூட சிறப்பித்துக்கூறினாறாம்.

நாம் நமது ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம். அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.

No comments:

Post a Comment