Friday, February 6, 2009

காலத்தின் அருமை

இன்ன ஆண்டில் இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால் அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

  • உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!
  • பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்பவன் பயனற்ற பிறவிகளே.
  • எந்த காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அந்தக் காலத்தில் அதை செய்து விட வேண்டும் இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

ஒரு வருஷம் முடிகிறது என்றால் ஒரு வயது முடிகிறது என்று பொருள். வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர இறங்குகிற சக்தி கிடையாது. எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பது தான் கேள்வி.

திருக்குறள் கூறுவது:

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்.

பொருள்: செயலுக்கேற்ற காலமும் இடமும் அறிந்து செயல்பட்டால், உலகையே பெற விரும்பினாலும் பெற முடியும்.

பழமொழிகள் கூறுவது:

காலம் பார்த்து பயிர் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

ஆடிப் பட்டம் தேடி விதை.

வினை விதித்தவன் வினையருப்பான். திணை விதித்தவன் திணையருப்பான்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒவ்வாது வானம் பெயல்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment