Tuesday, February 24, 2009

கோபம்

யாராவது நம்மைப் பார்த்து 'சோம்பேறி', 'நீ எதற்கும் லாயக்கி இல்லாதவன்', 'உன்னால் ஒரு புரியோஞனமும் கிடையாது' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறினால் நம்முள் பயங்கரமாக கோபம் வருகிறது. நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி சொன்ன வார்த்தையைய் ஒரு போதும் யோசிக்கவும் மாட்டோம், நம்மைப்பற்றி கூறியது என்று எடுத்துக் கொள்ளவும் மாட்டோம்.

இவ்வாறாக இன்னொருவரை திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்... திட்டப்பட்டவர் அவர் கூறிய ஏதாவது ஒரு குணம் உடையவராகத்தான் இருக்கும்.அப்படியாக இல்லாமல், இவர் நம்மைத் திட்டி விட்டாரே அது எல்லோருக்கும் தெரிந்து விட்டதே என்று நினைத்தால் தான் 'கோபம்' வருகிறது, இரத்த அழுத்தம் கூடுகிறது, இதயத் துடிப்பின் படபடப்பு அதிகரிக்கிறது, வார்த்தைகளில் தெளிவின்மை காணப்படுகிறது.

ஆகையால் நம்மைப் பற்றி யார் எது சொன்னாலும் அமைதியாக ஏற்றுக் கொண்டு நாம் அந்த வார்த்தைகளுக்கு பொறுத்தமானவரா என்று சற்று யோசிப்போம். இல்லையென்றால் அந்த வார்த்தைகளை கூறியவரையே சாறும்.

நாம் ந‌ம்மைப்ப‌ற்றி தெளிவாக‌ இருந்தோமானால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌டுமையான‌ வார்த்தைக‌ளுக்கு இட‌மேது...

No comments:

Post a Comment