Thursday, February 26, 2009

சமமான வெற்றி

நாம் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். அப்போது இருவரும் இரு மாறுபட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டு "நான் சொல்வது தான் சரி", "நான் சொல்வது தான் சரி" என்று வாதாடுகிறோம். இங்கு ஒருவருக்கு ஆதரவாக சொன்னால் மற்றவர் தோற்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இந்த இருவருமே "என்னுடைய கருத்து சரியா" என்று பார்க்காமல் இந்த நேரத்துக்கு எது சரி என்று கருத்தின் தன்மையைய் மட்டும் பார்த்து முடிவுக்கு வரும் போது பிரச்சனைக்கு தீர்வு கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவரும் வெற்றி அடைந்தது போல் சந்தோசப்படுகிறோம். இதற்கு சமமான வெற்றி என்றே கூறலாம்.

உதாரணமாக, லியோனி மற்றும் சாலமன் பாப்பையா போன்றோர்களால் நடத்தப்படும் "பழைய பாடலா, புதிய பாடலா", "தனிக் குடும்பமா, கூட்டுக் குடும்பமா", போன்ற பட்டி மன்றங்களில் “இது தான் சரி” அல்லது “அது தான் சரி” என்று கூறாமல் இந்த நேரத்திற்கு "எது சரி" என்று கருத்தின் தன்மையைய் வைத்தே முடிவை தெரிவிக்கின்றார்கள்.

· ஒரு மரம் சிறந்த மரமா இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பலனை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

· ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதை அவனைக் கேட்டு தெரிந்து கொள்வதில்லை. அவனது பழக்க வழக்கங்களையும், அதன் பயனால் அவன் பெரும் சாதனையைகளையும் வைத்துதான் அவனைப் பற்றி உலகம் அறிகிறது.

No comments:

Post a Comment