Tuesday, February 10, 2009

பாராட்டு

மேலதிகாரி நம்மைப்பார்த்து சபாஷ் நீ நன்றாக வேலை செய்கிறாய் என்று ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னால் நாம் சந்தோசத்தில் மிதப்போம்.அதே மேலதிகாரி நம்மை ஒரு வார்த்தை திட்டி விட்டால் நம் சந்தோசம் அனைத்தும் ஒட்டு மொத்தமாகப் போய்விடும்.

இதைத்தான் சொல் வேந்தன் சுகி சிவம் அவர்கள் மிகவும் அழகாக சொல்வார்.

"பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்! பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!"

"பிறர் உங்களை பாராட்டாத பொழுதும்,

நீங்கள் மற்றவர்களை பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!!!"

- நன்றி: சுகி சிவம்.

No comments:

Post a Comment