Thursday, September 30, 2010

சிந்தனைகள்

01 அக்டோபர் 2010

சிந்தனைகள்

· ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும், அந்த காரியத்தைச் செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான்.
· தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
· பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
· உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான, நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும்.
· விதி ஒரு கதவை மூடுகின்ற போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் நியதி.
· ஒரு மனிதன் எதைக் கற்பனை செய்து அதில் நம்பிக்கை வைக்கிறானோ அதை நிச்சயம் அடைகிறான்.
· மனதை ஒன்றிலேயே ஒரு நிலைப்படுத்த முடியுமானால், இப்போது நாம் சாதிப்பதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாகச் சாதிக்க முடியும்.
· நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது.
· ஒருவன் எதை நினைக்கிறானோ அதுவாகவே இருக்கிறான் என்கிறது பைபிள்.

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.

கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET

எமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company

No comments:

Post a Comment