Monday, June 8, 2009

மூடநம்பிக்கை

‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.

இராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.

“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்"

No comments:

Post a Comment