Tuesday, March 31, 2009


நாகரிகம்

ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள் ‘புகை பிடிக்க கூடாது’ என்ற இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். தற்செயலாக அதை நிர்வாக மேலாளர் பார்த்து விட்டார். சற்றும் கோபப்படவில்லை அவர்கள் மீது. நேராக தனது இருக்கைக்குச் சென்று தன்னிடம் இருந்த உயர்ந்த ரக சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் தொழிலாளர்கள் தங்களது சிகரெட் துண்டுகளை தூக்கி எறிந்து விட்டார்கள். மேலாளர் ஒன்றுமே சொல்லாமல், ஆளுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தார். அவர்கள் தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்கள்.அப்போது மேலாளர் கூறியது? “நீங்கள் சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் இதைக் கொடுக்கிறேன்” அப்புறமாக குடித்துக் கொள்ளுங்கள். எதற்கும் வெளியில் போய் குடிப்பது நல்லதில்லையா?” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு தொழிலாளர்கள் அங்கு சிகரெட் குடிக்கவில்லை.

“அன்பின் மூலம் வெளிப்படுத்தும் நாகரிகம் எப்பொழுதும் வெற்றியையே தரும்”.

Monday, March 30, 2009

தோற்றமும் அறிவும்

அமெரிக்க மக்களுக்கே ஆங்கிலத்தில் அறிவுரை கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு முறை புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கையின் அருகில் இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் என்றாலே வெறுப்பு தான். அதுவும் துறவி, காவி உடை அணிந்தவர் என்பதை பார்த்தவுடன் ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசினர். விவேகானந்தர் பதில் பேசவில்லை, சண்டையிடவில்லை, கோபப்படவில்லை, மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் புகைவண்டி நின்றது. அப்பொழுது புகைவண்டி நிலைய அலுவலரை அழைத்து “இங்கே தண்ணீர் கிடைக்குமா” என்று மிக அழகாக ஆங்கிலத்தில் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியத்துடன் திடுக்கிட்டனர். உடனே விவேகானந்தரிடம் வந்து உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று கேட்டனர். “நன்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும்” என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.அப்படியானால் நாங்கள் உங்களை அரை மணி நேரமாக திட்டிக் கொண்டிருந்தோம்… நீங்கள் ஏன் எங்களோடு சண்டையிடவில்லை என்றனர். விவேகானந்தரின் பதில்…”நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல”. அவரது புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் சுவையாக இருந்தது.

“ஆளைப் பார்த்தவுடன் யாரையும் தவறாக புரிந்து கொள்வதோ அல்லது

அவரைப் பற்றி தவறாக மதிப்பிடுவதோ வேண்டாம்”.

Friday, March 27, 2009

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.

நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.



இரத்தினச் சுருக்கம் வியாழன், 26 மார்ச் 2009
இராமாயண கதையைப்பற்றி விளக்கிச் சொல்ல பெரியவர் ஒருவர் ஒரு ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் ஐந்தே நிமிடத்தில் இராமாயணக் கதையைய் சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சற்றே யோசித்த அந்த பெரியவர் பிறகு ஒப்புக் கொண்டார்.
கதை…இந்த உலகத்தில் ‘எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும். எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்’. என்று கதையைய் முடித்தார்.
எப்படி… எப்படி என்று கேட்டார்கள் ஊர்க்காரர்கள். பதில்…அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான், சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர். ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன.
ஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான் என்று கூறி கதையைய் முடித்தார்.
இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் இராமாயணத்தை முடித்த அந்த பெரியவருக்கு நியை பரிசு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
“ஒளவையார் கூறிய, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இது தானோ?”


உயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.

ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.

“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.

“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது.
நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

வரதட்சணைக்கயவர்கள்!

கோடுபோட்டு வாழ்ந்த
குடும்பத்தை
கூறு போட வந்த
கோட்டான்கள்!

கன்னியின் பெயரைக் கேட்டு- அவளின்
கல்வித்தகுதியையும் கேட்டு
ஆடச் சொல்லி
பாடச் சொல்லி
இன்னும் பல
நாடகம் நடத்தி
பெண்பார்க்கும் படலம்
அரங்கேறுகிறது!

மெய்ப்பொருத்தம்
இல்லையென்றாலும்
காசுக்காக -
பொய்ப்பொருத்தம்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது!

ஏதுமறியா
இளம் பெண்களை
கயவர்கள் -
கட்டிக் செல்கின்றனர்
அவர்களை
காலமெல்லாம்
கண்ணீர்ப் பெண்களாக்க!

பெண் பார்க்கும் படலத்தின்
அன்றைய அரங்கேற்றம்
அப்பப்பா!
கயவர்கள் -
கையில் சிக்கியபின்
எத்தனையெத்தனை
ஆர்ப்பாட்டம்!

ஜீவனுள்ள போதே
இலவசச் செலவில்
கன்னியர்க்கு
மரணத்தைக் காட்டுகின்றனர்!

மாமியார் என்ற
சர்வாதிகாரிக்கும்
கணவனென்ற
கையாலாகதவனுக்கும்
வரதட்சணையென்ற
வரிப் பணத்திற்கும்
அடிமையாகி
ஐயகோ!
கன்னியர் படும் துயரம்
கணக்கிலடங்கா!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம உரிமை
அது
படுக்கையறையில் மட்டுமே!
ஐந்து நிமிடங்கள் கழிந்தால்
அந்தோ…
அவ்வுரிமையும்
பறிபோகிறது!

தூ...
மடையர்களே!
உங்களை
ஆணென்று சொல்ல -
ஆண்மையுள்ளவனென்று நினைக்க
உங்களுக்கே
வெட்கமாயில்லையா?

ஏ! கண்ணா!
இந்தக் கயவர்களையெல்லாம்
அழகே இல்லா
அரக்கிககளாய் மாற்றிவிடு!
அப்படியாவது
இவர்களுக்கு
புத்தி வரட்டும்!

ஏ! பாரதியே!
'மாந்தராய்ப் பிறப்பதற்கு - நல்ல
மாதவம் செய்ய வேண்டும்'
என்றீரே?
இப்போது
மாந்தராய் பிறப்பவரெல்லாம்
மாபாபம்
செய்தவரய்யா....

ஏ! இளைய சமுதாயமே!
காலத்தைப் போல்
உன்
கருத்தையும் மாற்றிக்கொள்!

வரதட்சணைத்
தணலில் வாழும்
இளங்கொடிகளுக்காக
உன்
உறுதித் தேரை
அருகே நிறுத்து!


அப்படியாவது
கன்னிக்கொடிகள்
உங்களை
பின்னி வளரட்டும்!

கலப்புத்திருமணம்
என்ற
கலப்பையால்
ஆழ உழுது
வரதட்சணைக்களை
வேறோடு
உழுது எறி!

உன் வாழ்க்கை
நீ வாழத்தான்.
இன்றே
உறுதி செய்!
நடுத்தர வர்க்கத்தை
அமைதி செய்!

தற்கொலைகள்
தடுக்கப்படும்!
சகல ஜாதியும்
ஒன்று படும்!

Tuesday, March 24, 2009

பழகிப் பார்ப்போம்

இவ்வுலகில் பிறந்த அனைவருமே பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை. காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மேற்கில் மறைவது போல, பகல் மற்றும் இரவு மாறுவது போல, நமது வாழ்விலும் பணக்காரன் ஏழையாக மாறுகிறான், ஏழை பணக்காரனாக மாறுகிறான். இது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளே. இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.

இந்த பழைய பாடல் வரிகளைப் போல,

“ஒரு சாண் வயிற்றிற்காக மனிதன் கயிற்றிலே நடக்கிறான் பாரு”.

ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் இவ்வுலகில் ஏது கலாட்டா….

நமது முழுவாழ்க்கையின் சேமிப்பு நமது உணவிற்காகவும், நமது பிற்கால சந்ததிகளின் உணவிற்காகவும் மட்டுமே. இப்பிறவி எடுத்ததன் பயனே இன்பம் மற்றும் துன்பம் அனைத்து அனுபவங்களையும் பெற்று வாழ்வை சந்தோச மயமாக்குவதற்காக மட்டுமே.

உதாரணமாக,

  • தினமும் கடற்கரை ஓரமாக நடப்பவராக இருந்தால் குடிசைப்பக்கம் ஒரு நாள் நடந்து பார்ப்போம்.
  • மூன்று நேரமும் உணவு உண்பதற்கு பதிலாக ஒரு நேரம் நமது வயிற்றை பட்டினி போட்டுப் பார்ப்போம்.

இப்படி வித்தியாசமாக செய்யும் போது உலகமே வேறு விதமாக தோன்றும். ஏழ்மை மற்றும் பட்டினி பற்றி அறிய வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தையும் வாழ்வையும் மேலும் நன்றாக ரசிக்க முடியும்.

சிந்தித்தவர்கள்:

  • இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டரான மாகத்மா காந்தி, ஆங்கில உடை அணிந்து பழகியவர் வெறும் அரைத்துண்டு கட்டி உலவி ‘அஹிம்சை’ என்ற மந்திரத்தின் மூலம் நமக்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.
  • அமெரிக்காவில் வாழ்ந்த டாக்டர் ஷ்வைஸ்டர் ஆப்பிரிக்காவில் குடியேறி மருத்துவமனை திறந்து தொண்டாற்றினார்.
  • யுகோஸ்லாவியாவில் பிறந்து வளர்ந்த ‘ஏழைகளின் சகோதரி’ அன்னை தெரசா மேற்கு வங்காளத்தில் குடியேறி தொழுநோயைய் அறவே ஒழித்தார்.

வாழ்க்கையை இரசித்தல் கோபத்தை தவிர்த்தல், மகிழ்ச்சியைய் பெருக்குதல், கவலைகளை கைவிடுதல் இவையெல்லாம் புதிய உலகின் பல வழிகள்.